வெண்பாவின் இலக்கணம்
----------------------------------------------
வெண்பாவானது, குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவியல் வெண்பா, பஃறொடை வெண்பா என நான்கு வகைப்படும்.
1. வெண்பாவில் இயற்சீர் நான்கும், வெண்சீர் நான்கும் வரும்
2. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டும் வரும்
3. ஈற்றடி சிந்தடியாகவும், ஏனையடி அளவடியாகவும் வரும்
4. நாள், மலர், காசு, பிறப்பு வாய்பாட்டால் முடியும்
இவை நான்குக்கும் பொதுநெறி.
குறிப்பு 👇
வெண்பாவில் கனிச்சீர் நான்கும் வரக்கூடாது.
இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளையன்றி, வேறு தளைகளும் வருதல் கூடா.
அளவடி சிந்தடியன்றி, வேறு அடிகளும் வாரா.
வெண்பாவின் அளவடிகளில் பொழிப்பு மோனை வரவேண்டும். சிறுபான்மை ஒரூஉ மோனையும் வரலாம்.
சிந்தடியாகிய ஈற்றடியிலும் பொழிப்பு மோனை வரவேண்டும். அதாவது முச்சீரடியாகிய அதன் முதற்சீரிலும் ஈற்றுச்சீரிலும் மோனை வரவேண்டும்.
இவற்றை நினைவில் கொள்க.
No comments:
Post a Comment